ஏறக்குறைய 23 நாள் இடைவெளிக்கு பின் தசாவதாரத்தை ஒரு வழியாக காண முடிந்தது.26 வருடங்களாக கமல் படம் பார்த்து வருகிற நான், இவ்வளவு நீண்ட இடைவெளியில் அவர் படத்தை பார்ப்பது இதுவே முதல் முறை.கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிற படம் என்பதால் ஒரு 100% அக்மார்க் கமர்ஷியல் விருந்தை expect பண்ணலாமே அன்றி ஒரு அன்பே சிவம், மகாநதி எல்லாம் எதிர் பார்க்க முடியாது. Hence எதிர் பார்ப்பை ஏமாற்றாமல் ஒரு racy commercial entertainer வழங்கியிருக்கும் கமல் and ரவிகுமார் இருவருக்கும் ஒரு ஓ போடலாம்...!
கமல் மற்றும் எம்.ஜி.ஆர்.
உலகம் சுற்றும் வாலிபனுக்கும் தசாவதாரத்துக்கும் உள்ள தற்செயலான ஒற்றுமைகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
1. Basic plot of the both the movies were same. அங்கே அணு சக்தி formula இங்கே biological weapon. ஆனால் 10 கதாப்பாத்திரங்களையும் chaos theory மூலம் இணைத்த விதம் தசாவதாரத்தை எம்.ஜி.ஆர். படத்திலிருந்து வேறு படுத்தி விடுகிறது.
2.இரண்டு படங்களிலும் ஒரு character ஓடிக் கொண்டே இருக்கிறது.
3. பிரம்மாண்டத்துக்கு உ. சு. வா வில் expo அதன் பின்னணியில் உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பாடல் என்றால் இங்கே 12ம் நூற்றாண்டு காட்சிகள். அதன் பின்னணியில் கல்லை மட்டும் கண்டால் பாடல். ரெண்டும் chartbusters.
4. ரெண்டு படங்களிலும் racy screenplay. not even a single dull moment in the both films.
5. படம் வெளி வருவதில் பல சிக்கல்கள். ஆனால் தடைகளைத் தாண்டிய பிரம்மாண்டமான வெற்றி....!
6.அங்கே நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ...என்றால் இங்கே உலக நாயகனே.......
இதை தாண்டி எனக்கு வேறு சில ஆச்சரியங்கள் காத்திருந்தன.
கமலும் அறிவியலும்
Start ... camera... action...!
1986 - விக்ரம்.
பாலைவன சண்டைக்காட்சிக்கு முன்... ஒரு கணினியை பார்த்து சத்யராஜ் has agniputhra reached its destination ... என்று பதற அது interpreter போல் பச்சை backgroundல் வரி வரியாக துப்புகிறது. உடனே மிஷின் கன் கொண்டு சுடுகிறார். spoofy version of james bond film என்று classify செய்யப் பட்ட விக்ரம் எனக்கு தெரிந்து கம்ப்யூட்டர்கள் "நடித்த" முதல் தமிழ்ப் படம்.
5 பைட் 6 பாட்டு 3 sentiment scene அதற்குள் முடிந்தால் ஒரு கதை என ஒரு " வேல் கம்பு" ரசனையுடன் இருந்த தமிழன் (i am also a part of it... !) விக்ரம் படத்தை எதிர் பார்த்த அளவு வெற்றி பெற செய்ய வில்லை. விக்ரம் தோற்ற ஆதங்கம் 1992 வில் இப்படி வெளிப்படுகிறது.
cut....
1992 - தேவர் மகன்
பெரிய தேவர் : வேல் கம்பை தூக்கி போட்டுட்டு விஞ்ஞானம் பேச வான்னா எப்படி வருவான்? மெதுவா தான் வருவான்..
சக்தி : மெதுவானா எம்ம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலருக்கே...!
2008
விஞ்ஞானம் தமிழ் சினிமா ரசிகனுடன் chaos theory வழியாக "புரிந்து" கைகுலுக்க, கமலின் ஆதங்கத்தை போக்க 16 வருடம் தேவை பட்டு இருக்கிறது.
சுஜாதா வசனம் எழுதிய அந்நியன் படத்தில் வரும் இந்த காட்சி, chaos theoryக்கு எளிய example. ஒரு குடிமகன் மழை நாளில் பள்ளி சிறுமிகள் அடைந்த ரிக் ஷாவில் மோதி விட மின் கம்பி மீது தடுமாறி விழும் சிறுமி மின்சாரம் தாக்கி மரணம் அடைகிறாள்ஒரு சின்ன செயல் (குடி காரனின் மோதல்) பெரிய இழப்புக்கு (சிறுமியின் மரணம்) probability ஆக இருக்கிறது. தசாவதாரத்தில் 10 கதாப்பாத்திரங்களையும் chaos theory மூலம் இணைப்பதில் சுஜாதாவின் பங்கு புரிகிறது.நன்றி மறக்காமல் கதை விவாத குழுவில் அவர் பெயரை இணைத்ததற்கு ஒரு ஓ..!.
கமலும் சரித்திரமும்
தசாவதாரத்தில் சொல்ல படுகிற சைவ - வைணவ மோதல்களுக்குஆதாரங்கள் இருக்கின்றன. ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.
இதை அப்பர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
என பாடுகிறார்
இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே. இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு. இதை களப்பிரர்கள் காலம் / இருண்ட காலம் என்று சொல்கிறார்கள்.
களப்பிரர்கள்
களப்பிரர்கள் காலம் காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார் போன்ற அடியார்கள் இருந்த காலம். பக்தி இயக்கம் வளர ஆரம்பித்த காலம். குகைக் கோயில்களைக் கட்ட ஆரம்பித்த காலம். (பிள்ளையார்ப்பட்டி)
இருண்ட காலத்தில் தான் பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஏற்பட்டன. ஐம்பெருங்காப்பியங்களும் இந்தக் காலகட்டத்தையொட்டித்தான் இயற்றப்பட்டன.
மதுரையில் வஜ்ரநந்தி என்னும் சமண முனிவர் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி தமிழை வளர்த்து வரச் செய்தார். சைவ சமயத்தின் பக்தி மார்க்கம் இந்தக் காலகட்டத்தில் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதிரியான சைவ சமயம், சங்க காலத்தில் இருந்ததில்லை. களப்பிரர்கள் புத்தமதத்தை நேசித்தனர். இவர்கள் தம் ஆட்சி காலத்தில் சேர, சோழ, பாண்டியரகளையும் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதையும் வரலாற்று சான்றுகள் பகிர்கின்றன. சைவ சமயத்தின் பால் பெரும் பற்றுகொண்டிருந்த சேர, சோழ, பாண்டியர்கள்தாம் பின்னாளில் களப்பிரர்களுக்கு எதிராக எழுச்சியுற்று திரண்டு அவர்களை போரிட்டு அழித்து சைவம் தழைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதிலும், குறிப்பாக சோழர்கள் சைவ சமயத்தின் பால் அதிக ஈடு பாடு கொண்டு விளங்கினர் . புதியதாக பல புதிய சைவ சமய கோயில்களை கட்டினர். சிவனடியார்களை ஆதரித்து போற்றினர்.
நீண்ட நெடுங்காலத்திற்கு தமிழ்நாட்டை தங்கள் ஆளுகைக்குள் வைத்திருந்த சோழர்களால் பெருமளவில் சைவ சமய கோயில்கள் எழுப்பப்பட்டன. சோழர்கள் சைவத்தின் மீது காட்டிய பற்று பிற மதத்தினர் அழிவுக்கும் காரணமாயிற்று. அதற்கு உதாரணம் இரண்டாம் குலோத்துங்கன் (1133 - 1150) ஆட்சி.
கிருமி கண்ட சோழன்
விக்ரம சோழனின் (1118 - 1135) மகன் இரண்டாம் குலோத்துங்கன் (1133 - 1150) இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் இவனை "அநபாயன்" எனக் குறிப்பிடுகின்றன.
அபயன், அநபாயன், திருநீற்றுச் சோழன், பேரம்பலம் பொன் வேய்ந்த பெருமாள், பீடங்கண்ட பெரியபெருமாள், என்ற சிறப்புப் பெயர்களால் இவன் புகழப்படுகிறான்.
சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் இவன்
"சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன்'',
"புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன்'',
என்றெல்லாம் இவனைப் போற்றிப் புகழ்கிறார்.
ஒட்டக்கூத்தர் இவனது அவை புலவர்.
இவன், ஒரு பழுத்த சிவபக்தன். இவன் தன் வாழ்நாளில் போர் ஏதும் செய்யாமல், பொருள் முழுவதையும் தெய்வத் திருப்பணிகளிலேயே செலவிட்டான். தில்லை பூலோகக் கைலாஸமாகத் தோற்றமளித்ததில் இவனுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு எனலாம். அங்குக் கோபுரம் அமைத்தான், மண்டபங்கள் கட்டினான்.
இவன் சிவன் பால் கொண்டிருந்த பக்தியினால் தில்லை நடராஜர் ஆலயத்தில் இருந்த கோவிந்தராஜர் திருமேனியை அகற்றிய காரணமாக வைஷ்ணவ சமூகத்தினரின் கடும் கண்டனத்துக்கு உள்ளானான்.
இவன் கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்க்கிறார்கள்.அவர் விஜயநகர ஆட்சியில் சிலையைக் கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார். அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார். இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஸ்ரீ ராமானுஜரை தொந்தரவுக்கு உள்ளாக்கியச் செயலுக்காக இவன் "கிருமிகண்ட சோழன்'' என .அழைக்க படுகிறான்.
இன்று வரை பெருமாளுக்கு சிதம்பரத்தில் ப்ரமேற்சவமோ கொடிஸ்த்தம்ப பிரதிஷ்டையோ கிடையாது.அதற்கும் ஒரு தடையுத்தரவு வழக்கு நிலுவையில் இருக்கிறது.
திருவிதாங்கூர் [அக்காலத்து கேரளா + கன்யாகுமரி ] நாட்டை பிடித்த சோழர்கள் அதிகாரம் மூலம் இங்குள்ள ஆலயங்களில் ஆகம வழிபாட்டை வற்புறுத்தி புகுத்தினார்கள் என்ற செய்தி மோதல் ஆதாரத்துக்கு வலு சேர்க்கிறது..!
அவதாரங்கள்
சில அவதாரங்களில் மேக்கப் சொதப்பினாலும் தனது Voice Modulation, Body Language இவற்றால் just like that ஜெயிக்கிறார் கமல். ஒவ்வொரு அவதாரமும் கமலின் பழைய characters நினைவு ஊட்டி ஒரு happy nostalgic feelஏற்படுத்துகிறது.
1.poovaraagavan
ஒடுக்கப் பட்டவர் என சிம்பாலிக்காக காட்ட தோளைக் குறுக்கி நடித்திருக்கிறார் கமல். மணல் கொள்ளையைத் தடுப்பது, சுனாமி காட்சியில் காப்பாற்றப் போகும் போதும், பிணமாய் கிடக்கும் காட்சியிலும் கலக்கி இருக்கிறார். இமையா கண்கள் another plus. இவரால் ஆண்டாளும், கோவிந்தனும் காப்பாற்றப் பட வைரஸ் மறுபடி கோவிந்தன் கைக்கு போகிறது..இவர் இறந்த பின் பாட்டி அழும் காட்சி நெகிழ்ச்சி.but உன்னால் முடியும் தம்பி..உதய மூர்த்தி ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
2.balraam naidu
கோவிந்தனுடன் விசாரணை, குரியர் சர்வீஸில் விசாரணை, சிதம்பரத்தில் பாட்டியுடன் விசாரணை அப்புறம் கலிஃபுல்லாவிடம் விசாரணை ஃப்ளெச்சரையும் கோவிந்தனையும் ஹெலிகாப்டரில் துரத்துவது.. இவ்வளவு தான் இந்திரன் சந்திரன் மேயர் போல் இருக்கும் balraam naidu's job.but...தெலுங்குக் காரர்களுக்கே உரிய manerisms..superb dialogue delivery..
முஸ்லீம் இயக்கங்களின் பெயரை மட்டுமே சொல்லி அதைச் சேர்ந்தவனா எனக் கேட்பதாகட்டும்...
ஆந்திராவில் இருந்த நானே தமிழ்ல பேசறேன். தஞ்சாவூர்ல இருந்துட்டு நீ இங்கிலீஷ்ல பேசற.. !
செம நக்கல்..!
ராவ் - தெலுகா
பாபு - இல்லை கன்னடம்...
ரெண்டுக்கும் ஸ்கிரிப்ட் ஒண்ணுதானே.. !
ராவ், நீ ராவோட ராவா போய் எந்தெந்த அட்ரஸூக்குப் பார்சல் அமெரிக்காவிலிருந்து போயிருக்குன்னு பாரு....
superb ........!
3. govind ramasamy
MMKR மதன் போல் இருக்கும் மீசை இல்லாத கமல்.Beagle worker. Ph.D in Bio Technology.
ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்கிற மாதிரி கடலோரம் வரை ஓடி கொண்டே இருக்கும் கமல்..
Virus எடுத்துக் கொண்டு தப்பிக்கும் பொழுது பதட்டம், சேது and சுரேஷ் கைக்கூலி என்றதும் அதிர்ச்சி, நாயுடுவின் முன்னால் தமிழ் பற்றிச் சொல்லும் பொழுது அவமானம், Nacl பற்றி சொல்ல தடுமாறுவது ... dhool...
நாயுடுவிடம் இருந்து தப்பித்து, ஃபிளெச்சர் இடம் இருந்து தப்பித்து, பாட்டியிடம் போராடி, மணல் கடத்தல் காரர்களிடம் மாட்டி, ஜப்பானிய நண்பனால் கடைசியில் இருந்து காப்பாற்றப்படுதல் என maximum scenes. fabulous performance...
4. fletcher
Coolest villain in recent time. Bribes Virus Development program head சேது with hell of dollars. சேது and சுரேஷ் இருவரையும் கொல்லும் போது... typical tamil masala villain..
5. krishnaveni patty.
தோல் பாவை கூத்தில் நடிப்பது,..மகன் அனுப்பிய பார்சலை பீரோவில போய் ஒளிவது . ...பூவராகன் இறந்த உடன் அழுவது...
காவி Costume reminds MMKR S.N Lakshmi and "பாண்டி முகி" மேக்கப் disappoints. (Make up கிழிஞ்சிருச்சு.. ).But 95 வயது தளர்ச்சிக்கு Make Up கிழிஞ்சு தான் இருக்கணும் என்று கமல் justify செய்தால் ஆச்சரியம் இல்லை. But Performance wise பின்னி எடுத்திருக்கிறார். Better than avvai shanmugi.!
6.shingen narasaahi
எனக்குள் ஒருவன் உபேந்திரா மாதிரி இருக்கும் சிங்கேன் நரசாஹி, தங்கையும் மச்சானும் உயிரிழக்க, கொன்றவனைத் தேடி வருகிறார். கடைசி சண்டைக் காட்சியில் மட்டும் நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
hiroshima விஷயத்துக்கு பழி வாங்கலாக இறுதிவரை திருப்பி அடிக்காமல் Fletcher அடிவாங்குவது super. இந்தியரை சாப்பாட்டு ராமன் என்று சொன்னவர்களுக்கு இந்த உதை தேவை..!
7.அவ்தார் சிங்..
வாழ்வே மாயம் ராஜாவை நினைவூட்டும் "ரத்த வாந்தி" அவ்தார் சிங்... பாடகன்.
மனைவியிடம் காட்டும் அன்பு இயல்பு. பாட்டா, உயிரா என வரும்பொழுது உயிரைத் தேர்ந்தெடுக்கிறார்.. மனைவிக்காக.
Punjabi's will speak loud and like a jatter box (no offense please)
Example - Kareenaa in Jab we met .(Hindi)
since M.G.R போல தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அப்படி பேச முடிய வில்லையோ?
8. ரங்கராஜ நம்பி
தமிழ் நாட்டு தாய்க்குலங்களின் பேராதரவை பெற்ற ரங்கராஜ நம்பி நடிப்பில் வீரம் தெறிக்கிறது. பின்னே...... தமிழ் நாட்டில் தசாவதாரத்துக்காக ஒட்டப் பட்ட சுவரொட்டிகளில் 60 % ரங்கராஜ நம்பி தானே இருக்கிறார். அடுத்த இடம் பல்ராம் நாயுடுவுக்கு.
"சுங்கம் தவிர்த்த சோழனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்.. மன்னனுக்குப் பிடித்திருக்கும் பிற தோஷங்களுடன் ப்ரம்மஹத்தி தோஷமும் பிடிக்கும் என்று சொல். அதைச் சொன்னவன் இந்த ரங்கராஜ நம்பி என்று போய்ச்சொல்.... !!"
என்று வீர முழக்கம் இடுவது அழகு..
அப்பா சொல்லிடுங்கோ என்று சொல்லும் மகனுக்கு கண்களால் மறுப்பை சொல்வது அதை விட அழகு. (look at his eyes in that shot. so powerful.)
"சாந்தாகாரம் புஜக சயனம் பத்மனாபம் சுரேஷம்
விஷ்வாதாரம் ககன சதர்ஷம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமல நயனம் யோகிபிர் த்யான கம்யம்
என்று சொல்லி ஸ்ரீமன் நாராயணன் மீது பறந்து விழும் காட்சி சிலிர்ப்பு..!
சில பகுத்தறிவு/ secularism Punches உண்டு. (identify and understand by yourself.)
இந்த 15 நிமிடங்கள் ஒரு நல்ல சிறுகதை. (சுஜாதாவின் நகரம் மாதிரி)
நல்ல வாசகன் உள்ளத்திலும் அலமாரியிலும் ஒரு collector's edition ஆக இதை சேமிப்பான்.. !
9. kalifulla khan
ஃபுல்லா காலியா? எனக் நாயுடு கமலால் கிண்டலடிக்கப் படும் கமல். உயரம் 6 அடி 8 அங்குலம்.. அப்பாவி...இந்தக் கேரக்டரின் வசனங்கள் இயல்பு. (gandhiji ja jaa)
ரத்தம் பெற, அம்மாவினை மருத்துவ மனையில் சேர்க்க என்று minimal shots. hence forgettable role to be honest. (leaving the theatre... எந்த scenes la வந்தார் னு யோசிக்க வேண்டி இருக்கு ) but இவர் வருகிற shot in the lift with avathar.. single shot. no editing gimmiks.. அற்புதம்...!
10. ஜார்ஜ் புஷ்
ஒரு கூடை sunlight ஒரு கூடை moonlight என்று "நண்பர்" கஷ்டப் பட்டு வெள்ளை ஆகி விட்டதால் KSR பதறி போய் Sir நீங்க ஏற்கனவே color. oops வெள்ளை..( requires no extra effect) so bush ஆக நடித்து விடுங்கள் என்று சொன்னதாலா இந்த character?.
ஜார்ஜ் புஷ் என்றாலே அபத்தமான statements and arrogant attitude. Could we Nuke them summarize it all...!
Cons of dasa
Every film has its own Minus points . Dasa is no exception. Unfortunately it too has its Minus points.
Cons
1. BGM score
2. Asin
3. Picturization of songs.
இளையராஜாவின் இசையும் சரி , பின்னணி இசையும் சரி will give you a nostalgic feel. You can easy identify the scene by yourself by just listening ilaiyaraaja's BGM itself.. (Who can forget the Ho... Ho... chorus in Naayagan composed for surya's death..!).
Ilayaraja's BGM score always elevates an ordinary scene to an extra ordinary scene.
But unfortunately Devi Sri's Prasad's BGM score in dasa is not like that kind. எளிதாய் மறந்து போகிறது once you leave the movie hall. The quality specified in the previous paragraph is completely lacking.
Too much re used tunes by Himesh results the songs mediocre.Only ulaganaayagane, oh ho sanam and kallai mattum kandaal are gud songs composed by himesh.Sadana sargam is too old for mukunda. Shreya ghoshal might have been a gud choice. Remix is pathetic. Ka Karuppanukkum is forgettable. Even the picturization of songs too was not good in my opinion. They could have been better.
Another speed breaker is ASIN.. obstructing the flow of the film.I think she is 96 ( a bit senior to krishnaveni paatti). Her's perumale chanting constantly DISTURBS NOT ONLY GOVIND but also audience like myself. At one stage i was perplexed... Are u asin or anacin hampering the screenplay?
In nutshell.. DASA - A FILM NEVER BEFORE And NEVER AGAIN... in certain aspects like richness and kamal's certain avathar..
Its a good intelligent commercial film from KSR and Kamal Combo..
Definitely GREAT with respect to K.S.Ravikumar's standards..!
But could have been better .. (GOOD) with respect to kamal's standards..!
Hope that Marmayogi directed by kamal himself attains that Kamal's CLASS standard.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment