Friday, August 31, 2007

நுழைவாயில்

ஒரு வழியாய் நானும் ஒரு வலைப் பதிவு தொடங்கி விட்டேன்.
என்ன எழுதுவதென்று தெரியாமல் வானப்பலகையில் நீல நிறத்தைக் கொட்டி விட்டுப் போகும் ஒரு பறவையின் சந்தோஷத்தோடு யோசிக்கிறேன்..!

நேற்றைய மரணங்களை பற்றிச் சிந்திக்காமல் ஒவ்வொரு நாளும்
புதிய நிறங்களால், வாசத்தால் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிற
பூக்களைப் போல....

நெஞ்சில் தோன்றும் நினைவுகளை, பார்த்ததை, கேட்டதை, படித்ததை, ரசித்ததை

இப்படி எதை பற்றியும் நேர்மையாகப் பதிவு செய்வதே என் நோக்கம்.

மற்றபடி...

ஓவியத்தில் மறைந்து கிடக்கும் நிறங்களின் ஆழமான மௌனத்தைப் போல்

இது மிகுந்த தோழமையோடு உங்களை வரவேற்கும்

ஓர் ரசிகனின் எண்ணங்கள் வெளியிடும் நேசப் புன்னகை...!